Wednesday 29 August 2018



வெறுமனே கடந்து போகும்
நாட்கள் அத்தனையிலும்
பொருளற்று பயணம் செய்யும்
புதுயுக நாயகன் நான்.
தனிமைப் பொழுதுகளில்
இருளுடன் போர் தொடுப்பவன்.
கண்களில் கனவுகள் எனக்கில்லை
எதிர்காலம் அதை நம்பியதில்லை.
வெற்றிகள் மீதும் பற்றிருப்
பதாகவும் தெரியவில்லை.
நீ வந்தாய்! வெற்றிடம் நீங்கச்
செய்தாய், மெதுவாய் மாறிய துலகம்.
வெண்ணிலா நீ துணை நிற்பதால்
இரவுகள் இனிமை சேர்க்கிறது.
நிகழ்காலத்தில் நீ வசிப்பதால்
கனவுலகம் கசப்ப தில்லை.
வரும் காலம் அது வந்துவிட்டு போட்டும்
ஒரு வேளை உலக மழிந்தால்
புதுயுகம் நெய்வேன் நீநான் வாழ.
பல தவம் செய்வேன் நின் கரம் சேர.
முற்றுப்புள்ளியில் முடிவதல்ல வாழ்க்கை
முழுமையா யதை வாழ்வதிலே என்றாய்
என்தேவி, எனை மாற்றும் காதலியே!
எனை மாற்றும் காதல் நீயே!

சரவணன்





No comments:

Post a Comment