Wednesday 8 August 2018

மாலை மயக்கம்


உருகும் பனியிரவில்
வருடும் காற்றைப் போல்
வந்து வந்து செல்லும்
அவள் நினைவுகள்.

மயங்கும் மனவெளியில்
மருகும் வெண்ணிலா போல்
தந்துவிட்டுச் செல்கிறாள்
பலக் கனவுகள்.

உறங்கா என்விழிகளில்
சூரியன் போல் சிவப்பாய்
சிந்திவிட்டுச் சென்றாள்
அவள் சிந்தனைகள்.

புரண்டு படுக்கும்
தேகக்கூட்டினில்
தடம் புரண்டுகிடக்கும்
என்னெஞ்சே சொல்!

அமைதிப் பூங்காவில்
அணுசக்தி ஒப்பந்தமா?
சிறுவனென நினைத்திருந்தேன்;
அணுகுண்டு வைப்பது ஏன்?

காதலென்று கூறிவிடாதே,
கதிகலங்க வைத்துவிடாதே!
காதலினால் படும் சோதனை,
சாதலினும் கடும் வேதனை.

ஈர்க்கும் கூர்விழிகள்
கார்மேகக் குழல் களைத்தால்
பால்போல் வெண்ணிறம்
அவள் கண்ணம்.

பாற்கடலில் கண்டெடுத்த
சிறுமுத்தென பற்கள்.
அல்லிப்பூ தேன் சிந்த
அவள்திரு விதழ்கள்.

ஆபரணத் தங்கம்
அலங்கரிக் கவில்லை
எனினும் அவள் சிரிப்பில்
ஆராதனை செய்யும் அழகு.

பார்வையில் கரைந்த யிந்த
பாவியின் மனம் தினம்
பதுமையின் இடைதனில்
இனி தனைத் தொலைக்கும்.



சரவணன்


No comments:

Post a Comment